கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் பெற்றோரை இழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக சிவி சண்முகம், விஜய பாஸ்கர் ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு இன்று (ஜூன் 20) வருகை தந்து கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை நலம் விசாரித்தார்.

நன்றி: News tamil 24/7

தொடர்புடைய செய்தி