முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஓபிஎஸ் கண்டனம்

67பார்த்தது
முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஓபிஎஸ் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்திய 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தோல்வியடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இறந்தவர்களுக்கு ரூ.25 லட்ச ரூபாய் நிவாரணும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நவீன சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி