கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்திய 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தோல்வியடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இறந்தவர்களுக்கு ரூ.25 லட்ச ரூபாய் நிவாரணும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நவீன சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.