சார்தாம் யாத்திரை: 12 நாட்களில் 42 பேர் உயிரிழப்பு

சார்தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகளவில் மக்கள் கூடுவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மக்கள் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. யாத்திரை தொடங்கிய 12 நாட்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேதார்நாத்தில் மட்டும் 19 பேரும், யமுனோத்ரியில் 12 பேரும், பத்ரிநாத்தில் 9 பேரும், கங்கோத்ரியில் 2 பக்தர்களும் உயிரிழந்தனர். இதற்கு, அம்மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பக்தர்களின் சிரமங்களை போக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி