தலைநகர் டெல்லியில் இன்று (மே 24) தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள கார்னிவல் பேங்க்கெட் ரிசார்ட்டில் மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், விருந்து மண்டபம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 50 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.