முதலை மிகவும் ஆபத்தான விலங்கு. தண்ணீரில் இருக்கும் போது யானைகளை கூட தாக்கி கொல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. அத்தகைய முதலைகள் டஜன் கணக்கில் இருக்கும் ஒரு குளத்தில் சிறுவன் ஒருவன் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குட்டி முதலைகளாக இருந்த போதிலும் ஆபத்து அதிகமே. அதிர்ஷ்டவசமாக முதலைகள் சிறுவனை தாக்கவில்லை. எப்போது, எங்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆபத்தை உணராமல் சிறுவனை வீடியோ எடுத்தவர்கள் மீது நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.