திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோபால கிருஷ்ணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். அங்கு நேற்று (மே 23) மாலை இளைஞர் ஒருவர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதனை கவனித்த கோபால கிருஷ்ணன், இளைஞரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர், கேஷியராக இருந்த கோபால கிருஷ்ணனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றார். தொடர்ந்து, போலீசார் அந்த இளைஞரை கைது செய்ததில் அவர் பெயர் நிகில் குமார் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.