பெண் தராததால் ஆத்திரம்.. செவிலியரை கடத்திய 4 பேர்

சென்னை வேளச்சேரியில் செவிலியர் ஒருவர் பணி நிமித்தமாக மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த சில மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றதாக, அவருடன் பணியாற்றும் மற்றொரு செவிலியர் மருத்துவமனையில் கூறியுள்ளார். பின்னர் வேளச்சேரி காவல் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி அடிப்படையில் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சபாபதி (27) என்பவர் அந்த பெண்ணின் உறவினர் என்பதும், ஒருதலைப்பட்சமாக அந்த பெண்ணை காதலித்து வந்ததும், பெண் கேட்டும் தராததால் கடத்தி சென்று திருமணம் செய்ய முயன்றதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி