தென் கொரியாவில் நடந்த தூங்கும் போட்டி

76பார்த்தது
தென் கொரியாவில் நடந்த தூங்கும் போட்டி
தென் கொரியாவின் ஹான் ஆற்றங்கரை ஓரம் தூங்கும் போட்டி நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தூங்கும்போது இடை இடையே காதில் கத்துவது, இறக்கைகளை வைத்து வருடுவது என சில இடையூறுகளும் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து தூங்குவதற்கு முன்பும், பின்பும் உள்ள இவர்களின் இதயத் துடிப்பை கணக்கிட்டு பின்னர் வெற்றியாளர்களை தீர்மானித்தனர்.