அண்ணாமலையை வன்மையாக கண்டித்த செல்லூர் ராஜு

53பார்த்தது
அண்ணாமலையை வன்மையாக கண்டித்த செல்லூர் ராஜு
ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஜெயலலிதாவை புகழ்வது போல, இந்துத்துவத்தை மட்டும் ஆதரித்ததாக கூறி ஜெயலலிதாவின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்திய அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். ஜெயலலிதா அவர்கள் எல்லா மதத்தையும் சமமாக மதித்தவர். சொந்த பணத்தில் இஃப்தார், கிருஸ்துவ விழாவை நடத்தியவர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி