சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்!

15461பார்த்தது
சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்!
ரிமல் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (மே 26) காலை தீவிர புயலாக வலுப் பெற்று இன்று நள்ளிரவு வங்கதேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் சூறாவளிக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடையிடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி