கணவரின் ஆணுறுப்பை அறுத்த பெண்.. அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டம் பர்ஷி தாலுகாவில் ஒரு ஆணும் திருமணமான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்கள் பிரிந்திருந்த நிலையில் இருவரும் ஒரு முறை சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண் இளைஞரை உடலுறவுக்கு அழைத்தபோது அதற்கு இளைஞர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த இளைஞரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி