வேட்பாளர் இல்லாமல் வாக்கு கேட்ட உதயநிதி!

575பார்த்தது
வேட்பாளர் இல்லாமல் வாக்கு கேட்ட உதயநிதி!
விருதுநகர் மக்களவைத் தொகுதி - அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக 'கை' சின்னத்திற்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விருதுநகர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் வேட்பாளர் அறிவிக்காததால் கைச்சின்னத்திற்கு மட்டும் உதயநிதி வாக்கு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி