ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி

57பார்த்தது
ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி
பாசிசத்தை வீழ்த்த, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திருச்சுழியில், நம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் நவாஸ்கனி அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்து இன்று பிரச்சார பயணத்தை தொடங்கினோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், எல்லாத் தேர்தல்களையும் போல இதுவும் ஒரு தேர்தல் அல்ல என்பதை உணர்ந்தே இந்த ஜனநாயக யுத்தத்தை நாம் தொடங்குகிறோம். இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி ஒன்றே நமது இலக்கு. வேடமிட்டு வரும் தமிழின எதிரிகளுக்கும் - முதுகெலும்பற்ற துரோகிகளுக்கும் படுதோல்வியை பரிசளிப்போம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி