ரூ.1000 விரைவில் வழங்கப்படும்

107046பார்த்தது
ரூ.1000 விரைவில் வழங்கப்படும்
உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் 'தமிழ் புதல்வன் திட்டம்' விரைவில் தொடங்கப்படும் என திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ரூ1000 இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி