13 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சமீபத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. 13 வயது சிறுமியை உள்ளூர் பாஜக தொண்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட பின், சிறுமியை கொன்று, உடலை நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாஜக ஓபிசி மோர்ச்சாவை சேர்ந்த ஆதித்யா ராஜ் என்பவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி