பிளிறிக்கொண்டு மக்களை விரட்டிய யானை (வீடியோ)

83பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை ஒன்று பிளிறிக்கொண்டு பொதுமக்களை துரத்திய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இன்று (ஜூன் 26) காலை வேளையில் பொதுமக்கள் சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென யானை ஒன்று பிளிறிக்கொண்டு ஓடி வந்தது. இதனைக்கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு ஓடிய யானை எதிரே வந்த காரை பதம்பார்த்துவிட்டு சென்றது. அங்கிருந்த மக்கள் யானையை போடா போடா எனக்கூறி விரட்டியடித்தனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24*7

தொடர்புடைய செய்தி