“விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்”

55பார்த்தது
“விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 26) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி