அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

55பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்
மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் சிக்கிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஜூன் 26) அவருக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் 3 நாட்கள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மக்களவை தேர்தலின் போது ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் சிறைக்கு திரும்பிய நிலையில் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி