பள்ளி மேற்கூரை விழுந்த விபத்தில் ஒருவர் பலி

66பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புனாவலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்த தொழிலாளி தினேஷ் மேக்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.