சாதி வாரி கணக்கெடுப்பு - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

50பார்த்தது
சாதி வாரி கணக்கெடுப்பு - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கடந்த 24ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்தியாவில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எனுப்பியுள்ளார். இத்துடன், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இணைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி