காஞ்சிபுரம் ஶ்ரீபெரும்புதூரில் Foxconn தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், பாலின பாகுபாடு இருப்பதாகவும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை எனவும் Reuters செய்தி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், Foxconn ஆலையில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக வெளியான செய்தி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.