துப்பாக்கி சூட்டில் இளைஞர் உயிரிழப்பு

56பார்த்தது
துப்பாக்கி சூட்டில் இளைஞர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் சுரங்கப்பாதை நிலையத்தில் நேற்று மாலை துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதமே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கிடையே எந்த விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை. மொத்தம் 10 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி