அழகிய பெண்கள் மூலம் ஆன்லைனில் வலை - 7 பேர் கைது

55பார்த்தது
அழகிய பெண்கள் மூலம் ஆன்லைனில் வலை - 7 பேர் கைது
வடமாநிலங்களை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை வைத்து தொழிலதிபர்களுக்கு வலை வீசி உள்ளனர். வலையில் சிக்கிய தொழிலதிபர்களை ஐதராபாத், மாதாப்பூரில் உள்ள பப்பிற்கு வரவழைத்த மோசடி கும்பல், இளம் பெண்கள் மூலம் விருந்தளித்துள்ளது. அதன் பின் பப்பில் நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறித்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் கொண்ட மோசடி கும்பலில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி