வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் பிரேமலதாவிடம் அவர்கள் வலியுருத்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சீட் விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனராம்.