பிள்ளைகளை படிக்கச் வைங்க.. கடிதம் எழுதிவிட்டு காவலர் தற்கொலை

84பார்த்தது
பிள்ளைகளை படிக்கச் வைங்க.. கடிதம் எழுதிவிட்டு காவலர் தற்கொலை
கோயம்பேடு K-10 காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் இசக்கி முத்துக்குமார். இவர், விருகம்பாவத்தில் மனைவி மற்றும் இரு மகன்களுடனும் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று (செப் 20) வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் கிடைத்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் இசக்கி பாண்டியன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி