வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் - சத்யபிரதாசாகு ஆலோசனை

58பார்த்தது
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் - சத்யபிரதாசாகு ஆலோசனை
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று (மே 23) மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி