நம் நாட்டில் ஐஐடிக்கு உள்ள மோகம் வேறு எந்த கல்வி நிறுவனங்களிலும் இல்லை என்றே சொல்லலாம். இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்தால் போதும்.. நல்ல நிறுவனங்களில் வேலை, லட்சக் கணக்கில் சம்பளப் பேக்கேஜ் போன்ற நிலையை எட்டி விடலாம் என பல மாணவர்கள் இங்கு படிக்க ஆர்வம் காட்டுவர். ஆனால், இப்போது பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நமது நாட்டின் ஐஐடியில் படித்த மாணவர்களில் சுமார் 38 சதவீதம் பேருக்கு இந்த ஆண்டு வளாக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.