சவுக்கு சங்கரும், பெலிக்ஸ்சும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாகவும் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் முழக்கம் எழுப்பினார். இதனால் மதுரை நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.