வீரசோழனின் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது

67பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சியை தொடங்கினார்
எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு நிகரானது எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கொண்டு வந்த 7. 5% இட ஒதுக்கீடு திட்டம் இந்த திட்டம் அவர் பெயர் சொல்லும்,
இந்த மூன்று ஆண்டு களில் திமுக ஆட்சியில் அனைத்து விலைவாசி யும் உயர்ந்து உள்ளது.

இந்த கேவலமான விடியா திமுக ஆட்சியை அகற்றிட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை பெருந்தலைவருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, கே. கே. சிவசாமி மற்றும் நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், காரியாபட்டி உள்ளிட்ட ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அலை கடலென கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி