ஸ்ரீவில்லிபுத்தூர்: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது...

57பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது. 100 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த வன்னியம்பட்டி பகுதியில் வாலிபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வன்னியம்பட்டி போலீஸாருக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் இராஜபாளையம் கலங்காபேரி புதுார் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் வீரக்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி