ஸ்ரீவி: லாட்டாரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது...

75பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மடார்வளாகம் கோவில் அருகே இருக்கும் பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் ஸ்ரீவில்லிபுத்துார் நம்பி நாயுடு தெருவை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் முத்து கருப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் நம்பர் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி