தென்கொரியாவை விரோத நாடாக அறிவித்த வடகொரியா

68பார்த்தது
தென்கொரியாவை விரோத நாடாக அறிவித்த வடகொரியா
தென் கொரியாவை தனி நாடாக அங்கீகரித்தும் விரோத நாடாகவும் அறிவித்தும் வட கொரியா அதிரடி காட்டியுள்ளது. இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியையும் கைவிட தனது அரசியலைப்பில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. தென் கொரியா உடனான சாலை மற்றும் ரயில் இணைப்புப் பாதைகளை வடகொரிய ராணுவம் துண்டித்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தென் கொரியா, இரு கொரியாவையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி