ஸ்ரீவி: சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த ஆலை உரிமையாளர் கைது

75பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்காலிகமாக பட்டாசு ஆலையை ரத்து செய்த பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த உரிமையாளர் கைது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுப்பனூர் வருவாய் கிராமத்தில் ராம் கணேஷ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தனிதாரால் சோதனை செய்த போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக பட்டாசு ஆலையின் உரிமத்தை கடந்த பிப்ரவரி 13 தேதி ரத்து செய்தனர் மாவட்ட நிர்வாகம். 

மேலும் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை திறந்து பட்டாசு தயார் செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் வந்ததை அடுத்து கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் உதவியுடன் பட்டாசு ஆலை சோதனை செய்தபோது மரத்தடியில் பட்டாசு தயார் செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டி கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் ராம்கணேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.24,000/- மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி