சிவகாசி: கழிவுப் பொருளில் திடீர் தீ விபத்து. போலீஸார் விசாரணை.

69பார்த்தது
சிவகாசி அருகே கழிவுப்பொருட்களில் திடீர் தீ விபத்து. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம். சிவகாசி பஸ் நிலையம் பின்புறம் உள்ள வணிக வளாகத்தில் சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவர் சிறுவர், சிறுமியர் வெடித்து மகிழக்கூடிய கம்பி மத்தாப்பூக்கு பயன்படுத்தப்படும் கம்பிகளை தயாரித்து
வருகிறார். இந்தநிலையில் மாதவன் நிறுவனத்தின் அருகில் இருந்த தேன் கூட்டை சிலர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது தேன் கூட்டை எரிக்க பயன்படுத்திய தீப்பந்தத்தை அணைக்காமல் மாடியில் வீசிவிட்டு சென்றதாலும், மாடியில் காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த அட்டை கழிவுகள் எரிய
தொடங்கியது. இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி