சிவகாசி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி 37. திருப்பூரில் வேலை செய்து வந்த இவர் இரு வாரங்களுக்கு முன்பு சிவகாசி வந்து பட்டாசு ஆலையில் அறையை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார். இதற்காக தனது டூவீலரில் விளாம்பட்டி ரோடு ஒத்தபுலி விலக்கு அருகே சென் றபோது ஊராம் பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இன்பராஜ் 26, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் முனியசாமி சம்பவ இடத்தில் உயிர்இறந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.