மஹாராஷ்டிராவில் ஹிந்துக்களுக்கென ஹிந்துக்களால் நடத்தப்படும் பிரத்யேக ஜத்கா இறைச்சி கடைகள் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதேஷ் ராணே அறிவித்துள்ளார். இதற்கென 'Malhar' சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹலால் முறைக்கு மாற்றாக இந்த ஜத்கா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஹிந்து மரபு படி, விலங்குகள் வலியில் துடிக்காமல் ஒரே அடியில் பலியிடப்பட்டு ஜத்கா இறைச்சி தயாரிக்கப்படுகிறது.