சிவகாசி: மாதாந்திர அதிவேக ரயில் சோதனை ஒட்டம் - இரயில்வே

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
வருகின்ற 25. 09. 2024 அன்று காலை 09: 30 மணியளவில் OMS ஆய்வு வண்டி‌ மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம் வழியாக தென்காசி ரயில் நிலையம் வரை அதிவேக மாதாந்திர சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதில் மானாமதுரை-அருப்புக்கோட்டை- விருதுநகர் வழியாக 121கி. மீ அதிவேக சோதனை ஓட்டம் முதல்முறையாக நடைபெறயிருக்கிறது அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், ஆகிய பகுதிகளில் தண்டவாளம் அருகாமையில் உள்ளவர்கள் 25. 09. 2024‌ காலை 9 மணி முதல் கவனமாக இருக்கவும் இருப்பு பாதை யாரும் கடக்க வேண்டாம். மேலும் இது சோதனை ரயில் என்பதால் சற்று முன்பின் தாமதமாகலாம் எனவே அன்று முழுவதும் சற்று கவனத்துடன் இருக்கவும் என பொதுமக்களுக்க இரயில்வே நிர்வாகம் அறிவித்தப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி