சிவகாசி: தகர செட்டில் பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது...

64பார்த்தது
சிவகாசி அருகே தகர செட் அமைத்து பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே தகர செட் அமைத்து பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல். சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் பாரைப்பட்டியில் SKS பட்டாசு அருகே உள்ள காலி மனையில் சட்டவிரோதமாக தகர செட் பலதரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் தயார் செய்து இருப்பு இருப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. இதை அடுத்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் சோதனையில் பலதரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் கணேஷன் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி