சிவகாசி: சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுபதுக்கிய நபர் கைது...

55பார்த்தது
சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருவள்ளுவர் காலனி பகுதியில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் வால்டர் வெற்றிவேல் (30) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பேன்சி வெடிகளை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வால்டர் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி