பேருந்தில் ஏறி சாம்சங் ஊழியர்களை தேடும் போலீஸ்

66பார்த்தது
தமிழ்நாட்டில் சாம்சங் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சாம்சங் ஊழியர்கள் 10 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அரசுப் பேருந்தில் ஏறிய காவலர்கள், அதில் சாம்சங் ஊழியர்கள் செல்கின்றனரா? என தேடி வருகின்றனர். இதனால், மற்ற பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நன்றி: Tamil Janam

தொடர்புடைய செய்தி