தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

79பார்த்தது
தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே 4 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி