சிவகாசி பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. பொதுமக்கள் மகிழ்ச்சி. சாலையில் வெள்ளபெருக்கு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப் 6 நேற்று இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன கனமழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. ஆனாலும் கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்து வருவதுடன் அவ்வப்போது பரவலாக சாரல் மழையும் பெய்து வந்தது. வழக்கமான வெயில் சுட்டெரித்து வந்த நாலையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென்று பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் பலத்த கனமழை 2 மணி நேரமாக பெய்தது. சிவகாசி நகர் பகுதி, புறநகர் பகுதி, திருத்தங்கல், சசி நகர், சித்துராஜபுரம், பேர்நாயக்கன்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் வெட்கை தணிந்து குளிர்ச்சியான காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பலத்து காற்று வீசியதால் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டன. சாலைக்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.