தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் முன்னிலையில் பதாகைகளை காட்டி நடந்த அமளியால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.