சிவகாசி: மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

65பார்த்தது
சிவகாசி: மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ். எப். ஆர். மகளிர் கல்லூரியில் 49&வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருணா அசோக், கல்லூரியின் தலைவர் திலகவதிரவீந்திரன், கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் விஜயலட்சமி சிரஞ்சீவிரத்தினம், பிரீத்திவசீகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

கல்லூரியின் முதல்வர் சுதாபெரியதாய் வரவேற்பு பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய வானியற்பியல் கழக நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சி. எஸ். ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவிகள் விருப்பம் தரும் துறையை தேர்ந்தெடுத்து மனநிறைவுடன் பயணிக்க வேண்டும்.
நாட்டிற்கு பயன்தரும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் 1046 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள் மேகலாதேவி, நீலாபுஷ்பம் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி