சிவகாசி: அரசு மருத்துவமனையில்சி. டி. ஸ்கேன் வசதி

50பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவ மனையில் சி. டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சிவகாசி அரசு மருத் துவமனையில் தினமும் உள் நோயாளிகளாக 600 பேர் வரை வருகின்றனர். வெளி நோயாளிகளாக 125 பேர் வரை சிகிச்சை அங்கேயே பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வருகின் நபர்களுக்கு சி. டி. ஸ்கேன் வசதி இல்லாத நிலை இருந்தது.

இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி கின்றனர். இந்நிலையில் 2024 மார்ச் முதல் சிவகாசி அரசு மருத்துவமனையில் சி. டி., ஸ்கேன் மையம் துவங்கப்பட்டது. ஆனால் இது குறித்து பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாததால் தற்போதும் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ரூ. 3000 வரை செலவழிக்கின்றனர்.

தலைமை டாக்டர் அய்யனார் கூறுகையில், சி. டி. , ஸ்கேன் இல்லாத போது விபத்தில் காயமடைந்து வருபவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைத்தோம். தற்போது இங்கேயே அந்த வசதி வந்துள்ளது, எனவே அனைவரும் இலவசமாக சி. டி. ஸ்கேனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி