சிவகாசி: மாவட்ட அளவிலான தடகளப் போட்டி...

51பார்த்தது
சிவகாசி: மாவட்ட அளவிலான தடகளப் போட்டி...
சிவகாசி அருகே உள்ள அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் உடல் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தளவாய்புரம் உள்ளிட்ட ஊா்களில் உள்ள 39 பள்ளிகளைச் சோ்ந்த 315 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 100, 200, 400 மீட்டா் தொலைவுக்கான ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் அசோக் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். முன்னதாக உடல் கல்வித்துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். நிகழ்வில் துணைப் பேராசிரியா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியா் அருண்சங்கா் நன்றி கூறினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி