சிவகாசி அருகே பட்டாசு தயார் செய்து பதுக்கிய இரண்டு பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி தட்டு மேட்டு தெருவை சேர்ந்த திருப்பதி இவர், சுப்பிரமணியபுரம் காலனியில் அரசு அனுமதி உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த சிவகாசி கிழக்கு போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதைப் போல் ஆலங்குளம் பாரதி நகரை சேர்ந்தவர் சங்கிலிகண்னன், இவர் கட்டளைப்பட்டி ரோட்டில் உள்ள தனக்கு சொந்தமான தகர செட்டில் அனுமதி இன்றி பட்டாசு பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.