கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

59பார்த்தது
கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
நாட்டிலேயே கண் தானத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற கண் தான வார விழாவில் அவர் பேசும்போது, “தேசிய அளவில் கண் தானம் பெறப்படும் கண்களில் 25 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டவையாகும். கடந்த 10 மாதங்களில் மட்டும் நமது மாநிலத்தில் இருந்து 208 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.