சாத்தூர்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து, ஒருவர் பலி,...

53பார்த்தது
சாத்தூர் அருகே உள்ள குகன்பாறையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில்- பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற லட்சுமி பட்டாசு ஆலையில் வழக்கம் போல் பட்டாசு ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணி செய்து கொண்டிருந்த அறை தரைமட்டமானது. மேலும் பணியில் இருந்த குருமூர்த்தி பாண்டியன் 19 என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயத்துடன் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ரசாயன பொருட்களை இறக்கி வைக்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் 24, என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாயிரம் பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி