வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.16 லட்சத்தை செலவழித்த நபருக்கு சிறை

66பார்த்தது
வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.16 லட்சத்தை செலவழித்த நபருக்கு சிறை
தனது கணக்கில் தவறாக செலுத்தப்பட்ட ரூ.16 லட்சத்தை திருப்பித் தராமல் செலவழித்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதியழகன் (47) என்பவருக்கு 9 வார சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செலவழித்தது போக மீதமுள்ள தொகையை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார். இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.